Saturday 7 February 2015

திராட்சை சாகுபடி - இயற்கை விவசாயம்

 
புதுப்புது யுக்திகளைப் புகுத்தி, புத்திசாலித்தனமாக செயல்படுவர்களுக்கு... விவசாயம், பொன்முட்டையிடும் வாத்துதான்’ என்பதை நிரூபித்து வருகிறார், எழுபத்து இரண்டு வயதைக் கடந்த மூத்த விவசாயி 'கேத்தனூர்’ பழனிச்சாமி. கேத்தனூர், ஆறு, குளம், வாய்க்கால்... என இயற்கை நீராதாரத்துக்கு வாய்ப்பில்லாத ஊர். ஆயிரத்து இருநூறு அடிக்கும் கீழே போய்விட்ட நிலத்தடி நீர்மட்டம். வறண்டு கிடக்கும் பாசனக் கிணறுகள்... இப்படியான சூழலிலும் 'பந்தல்’ விவசாயத்தில் முடிசூடாத மன்னராக அரை நூற்றாண்டு காலம் அசத்தி வரும், பழனிச்சாமியின் வெற்றிச் சூத்திரத்தை அறிந்து கொள்ள... திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் கிராமத்தில் உள்ள பழனிச்சாமி அவர்கள் கூறியதாவது
வாழ்க்கையை மாற்றிய கல்பந்தல்!
88-ம் வருஷம் வரைக்கும் திராட்சை சாகுபடிதான். கூடவே, கத்திரி, தக்காளி, மிளகாய்னு காய்கறி விவசாயமும். 89-ம் வருஷத்துல இருந்து பந்தல்ல காய்கறி சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். இப்போ, நாலு ஏக்கர்ல பாகல், மூணு ஏக்கர்ல பீர்க்கன், நாலு ஏக்கர்ல புடலை, ஒரு ஏக்கர்ல கோவைக்காய்னு மொத்தம் 12 ஏக்கர்ல பந்தல் விவசாயம் செய்றேன்.
நல்வழி காட்டிய நம்மாழ்வார்!
ஆரம்பத்துல, லாரி லாரியா உரத்தைக் கொண்டு வந்து கொட்டி, ரசாயன விவசாயம்தான் செஞ்சேன். அதேமாதிரி, வீரியமான பூச்சிக்கொல்லிகளைத்தான் தெளிச்சுட்டிருந்தேன். பகல் முழுக்க என் பண்ணையில பவர் ஸ்பிரேயர் ஓடுற சத்தம் கேட்டுக்கிட்டேதான் இருக்கும். ஒவ்வொரு முறையும் கணக்கு பாக்குறப்போ, உற்பத்திச் செலவுதான் அதிகமா இருந்துச்சு. லாபம் கம்மியா இருந்துச்சு. 'செலவை எப்படி குறைக்கலாம்?’னு பலர்கிட்ட யோசனை கேட்டுட்டிருந்த சமயத்துலதான், நம்மாழ்வார் பத்திக் கேள்விப்பட்டேன். அவரைத் தேடிப்போய் சந்திச்சுப் பேசி பல தகவல்களைத் தெரிஞ்சிக்கிட்டேன்.
'இயற்கை விவசாயம்தான் லாபகரமான விவசாயத்துக்கு ஒரே தீர்வு’னு முடிவு செஞ்சேன். கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுட்டேன்.
பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமிலம், அரப்பு-மோர் கரைசல்னு இயற்கை இடுபொருட்களை நானே தயாரிச்சு, பயிர்களுக்குக் கொடுத்ததுல நல்ல பலன் கிடைச்சது. அப்படியே, சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புலயும் கலந்துகிட்டு பயிற்சி எடுத்த பிறகு, முழுக்க முழுக்க இயற்கைக்கு மாறிட்டேன். கலப்பின பசுமாடுகளைக் குறைச்சுட்டு, காங்கேயம் மாடுகளை வாங்கினேன். அதுங்களோட சாணம், மூத்திரத்தை வெச்சு, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அமுதக்கரைசல்னு எல்லா இடுபொருட்களையும் தயாரிக்கிறேன்'' என்ற பழனிச்சாமி... புடலை பந்தலுக்குள் அழைத்துச் சென்றார்.
பந்தலுக்குள் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருந்த முற்றிய வெளிர் பச்சை நிற குட்டைப்புடலங்காய்களைப் பறித்து, சிறிய தள்ளுவண்டிகளில் சில பெண்கள் கொட்ட, அதை அப்படியே களத்து மேட்டுக்கு உருட்டி சென்று கொண்டிருந்தனர், சில ஆண்கள். அந்த பந்தலுக்குள் நின்றவாறே, பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார், பழனிச்சாமி.
அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
ஏக்கருக்கு 1,25,000 ரூபாய்!

'நடவு செய்ய வேண்டிய நிலத்தை உழுது, கல்தூண்களை ஊன்றி கம்பிகளைக் கட்டி பந்தல் அமைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் பந்தல் அமைக்க கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்ச ரூபாய் வரை செலவாகும். ஒருமுறை கல்பந்தல் அமைத்து விட்டால்... கம்பிகள் 50 வருடம் வரையிலும், தூண்கள் 100 வருடங்களுக்கு மேலும் பயன்தரும். பந்தல் அமைத்த பிறகு, 16 அடி இடைவெளியில் தென்வடலாக பார் அமைத்து, சொட்டு நீர்ப்பாசனக் கருவிகளைப் பொருத்திக் கொள்ளவேண்டும். ஏக்கருக்கு தலா, ஒன்றரை கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை 12 டன் தொழுவுரத்தில் கலந்து, பார் பாத்திகளுக்குள் தூவி... 5 அடி இடைவெளியில் இரண்டரை அடி அகலம் கொண்ட வட்டக்குழிகளை அமைக்க வேண்டும்.
விதைநேர்த்தி அவசியம்!
புடலை 200 நாள் பயிர். தரமான நாட்டு விதைகளை (ஏக்கருக்கு 400 கிராம் தேவைப்படும்) அரைலிட்டர் பஞ்சகவ்யாவில் இட்டு, 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழல் தரையில் பரப்பி, உலர வைக்க வேண்டும். இப்படி விதைநேர்த்தி செய்யும் போது முளைப்புத்திறன் அதிகரிக்கும். ஒரு குழிக்கு மூன்று விதைகள் என்ற கணக்கில் படுக்கை வசமாக நடவு செய்து... ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கில் பாசனம் செய்யவேண்டும். நடவு செய்த 16-ம் நாளில் களை எடுக்க வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை, 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.
வளர்ச்சிக்குப் பிண்ணாக்கு... பூச்சிக்கு புளித்த மோர்!
ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும், ஒவ்வொரு செடியின் தூரிலும் அரை லிட்டர் பிண்ணாக்குக் கரைசலை ஊற்ற வேண்டும். நடவு செய்த 18-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு, 250 மில்லி அரப்பு-மோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, அனைத்து செடிகள் மேலும் படும்படி விசைத்தெளிப்பான் மூலம் புகைபோல் தெளிக்க வேண்டும். 23-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து செடிகள் மேல் செழிம்பாகத் தெளிக்க வேண்டும்.
நடவிலிருந்து 20 நாட்களுக்கு ஒரு முறை, 100 மில்லி புளித்த மோர், 50 கிராம் சூடோமோனஸ் ஆகிய இரண்டையும் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தேவைப்படும் அளவுக்குத் தெளிக்க வேண்டும். இது இலைப்பேன் மற்றும் அசுவிணி உள்ளிட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, செடிகள் ஒரே சீராக வளர உதவி செய்கிறது. நடவு செய்த 60-ம் நாளுக்குப் பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு, 200 மில்லி புளித்த மோர், 100 கிராம் சூடோமோனஸ் என அளவைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இதைத் தெளித்து வந்தால், சாம்பல் நோய் மற்றும் வைரஸ் தொற்றுக்கள் இருக்காது.
26, 27-ம் நாட்களில் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம், ஆறு லிட்டர் மீன் அமிலம், 70 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து ஒவ் வொரு செடிக்கும் அரைலிட்டர் அளவுக்கு நேரடியாக ஊற்ற வேண்டும். இது நல்ல வளர்ச்சி ஊக்கியாக செயல்படும். 30-ம் நாளுக்குள் கொடிகளை கொம்பில் படர விட வேண்டும். கொம்புக்குப் பதிலாக கெட்டியான காடா நூலை கம்பியில் இழுத்துக்கட்டியும் படரவிடலாம். திசைமாறிப்போகும் கூடுதல் பக்கக் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.
60-ம் நாளில் 100 மில்லி அரப்பு-மோர் கரைசல், 100 மில்லி தேங்காய்ப்பால், 100 மில்லி இளநீர், இவற்றுடன் 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து, 10 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால், பெண்பூக்கள் உதிராமல் இருப்பதோடு, பூஞ்சண நோய்த் தாக்குதலும் இருக்காது.
பூச்சிகளுக்குப் பொறிகள்!
பந்தலுக்கு உள்பகுதியில் இரண்டு, மூன்று இடங்களில் விளக்குப் பொறிகளைக் கட்டித் தொங்க விட்டால், பச்சைப்புழுக்கள், காய்துளைப்பான்கள் போன்றவைக் கட்டுப்படும். பந்தலுக்குள் இரண்டு மூன்று இடங்களில் 'சிறிய அரிக்கேன்' விளக்கு வடிவத்தில் உள்ள இனக்கவர்ச்சிப் பொறிகளைக் கட்டித் தொங்கவிட்டால், பந்தல் காய்கறிகளைத் தாக்கும் குளவிகளைக் கட்டுப்படுத்தலாம் இந்தப் பொறிக்குள் சென்று மாட்டிக் கொண்டு அவை இறந்துவிடும்.
இதே பராமரிப்புதான் அனைத்து வகை பந்தல் காய்கறிகளுக்கும். ஆனால், பாகலுக்குக் கொஞ்சம் கூடுதல் பராமரிப்பு தேவைப்படும். புடலை சாகுபடியில், நடவு செய்த 65-ம் நாளில் இருந்து காய்களைப் பறிக்கத் தொடங்கலாம். தொடர்ந்து, 140 நாட்கள் வரை காய்ப்பு இருக்கும். சராசரியாக ஏக்கருக்கு 40 டன் அளவுக்கு விளைச்சல் இருக்கும். நாட்டுப்புடலை என்பதால், அடுத்த போகத்துக்கு உரிய விதைகளை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.மீண்டும், மீண்டும் விதைக்காக செலவு செய்வது மிச்சம்'
26 லட்ச ரூபாய் லாபம்!
சாகுபடிப் பாடம் முடித்த பழனிச்சாமி, ''ஒரு கிலோ புடலை சராசரியா கிலோ 15 ரூபாய்னு விலைபோகுது. ஒரு ஏக்கர்ல விளையற 40 டன் காய்கள் மூலமா, 200 நாள்ல கிட்டத்தட்ட 6 லட்ச ரூபாய் வருமானமா கிடைக்கும். நான் நாலு ஏக்கர்ல புடலை போட்டிருக்கேன். அது மூலமா 24 லட்ச ரூபாய் கிடைக்கும். சாகுபடிச் செலவு
10 லட்ச ரூபாய் போக... 14 லட்ச ரூபாய் லாபம். நாலு ஏக்கர்ல பாகல் இருக்கு. ஏக்கருக்கு சராசரியா 25 டன் விளைச்சல் இருக்கும். இதுவும் சராசரியா கிலோ 15 ரூபாய்னு விலைபோகும். நாலு ஏக்கர் பாகல் மூலமா 15 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.
10 லட்ச ரூபாய் சாகுபடிச் செலவு போக 4 லட்ச ரூபாய்க்கு மேல் லாபம்!
மூணு ஏக்கர்ல பீர்க்கன் இருக்கு. ஏக்கருக்கு 30 டன் கிடைக்கும். இதுவும் கிலோ 15 ரூபாய்னு விலைபோகுது. மூணு ஏக்கர்லயும் சேர்த்து மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல 9 லட்ச ரூபாய் செலவு போக, 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம்.
ஒரு ஏக்கர்ல கோவைக்காய் இருக்கு. இதுல ஏக்கருக்கு 30 டன் மகசூல் கிடைக்கும். இது கிலோ 20 ரூபாய்க்கு விலைபோகுது. இதன் மூலமா 6 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். 3 லட்ச ரூபாய் செலவு போக மூணு லட்ச ரூபாய் லாபம்.
ஆகமொத்தம் 12 ஏக்கர்ல இருந்து, 25 லட்ச ரூபாய்க்கு மேல லாபமா கிடைக்குது. வியாபாரிகள் என் தோட்டத்துக்கே வந்து காய்களை வாங்கிட்டுப் போறதால போக்கு வரத்துச் செலவுகூட இல்லை'' என்ற பழனிச்சாமி,
''இவ்வளவு வருமானத்தைப் பாக்கும்போது மலைப்பா இருக்கலாம். ஆனா, இந்த வெற்றிக்குக் காரணம் தினமும் நான் பந்தலுக்குள்ள போய் பாத்துப் பாத்து தேவையான இயற்கை இடுபொருளைக் கொடுக்குறதுதான். நிலம், நீர், நுணுக்கமான விவசாய அறிவு இருந்தா போதும்... எந்தப் பகுதியில வேணும்னாலும் பந்தல் விவசாயம் செய்து, யார் வேணும்னாலும் ஜெயிக்க முடியும்'' என்று நம்பிக்கை வார்த்தைகள் சொன்னார்.
தொடர்புக்கு,
கே.வி.பழனிச்சாமி,
செல்போன்: 99439-79791

சோலார் பம்ப்..

சோலார் பம்ப்..! கலக்கும் விவசாயி..!!
(ஆலோசனை: +91 96885 32123)



கரன்ட் இல்லை... கரன்ட் இல்லை...’ என்கிற குரல் ஒலிக்காத இடமே இல்லை. மாவு மில் தொடங்கி... 'மோட்டார் தயாரிப்பு நிறுவனங்கள்’ வரை பவர் கட் பாதிப்பு, படுத்தி எடுப்பதன் விளைவு சொல்லி மாளாது. விவசாயமும் இதற்கு விதிவிலக்கல்ல. கருகும் பயிர்களைக் காப்பாற்ற இரவுபகலாக மின்சாரத்துக்காக காத்துக்கொண்டு... 'இதற்கான மாற்றுவழியே இல்லையா...?’ என ஏங்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு, நம்பிக்கைக் கீற்றாக ஜொலிக்கிறது, 'சோலார் பவர்’ என்ற சூரியசக்தி மின்சாரம்.

''ஆம்... இது ஒன்றுதான் எதிர்காலத்தில் நம்மைக் காப்பாற்றப் போகிறது. இதுதான் உண்மை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்'' என்று நம்பிக்கையோடு பேசுகிறார்... இந்த சூரியசக்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீர் இறைத்துப் பாசனம் செய்துகொண்டிருக்கும் கோயம்புத்தூர் மாவட்டம், முருகன்பதி கிராமத்தைச் சேர்ந்த ஆர். விஜயகுமார்.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தின் குளிர்காற்று சிலுசிலுக்க, தோட்ட எல்லையில் ரயில்கள் தடதடக்க, தென்னை மரங்கள் குடை பிடித்துக்கொண்டிருக்க, ரம்மியமாக இருக்கிறது விஜயகுமாரின் தென்னந்தோப்பு. களத்துமேட்டில், தான் அமைத்திருக்கும் சூரியசக்தி மின்சார உற்பத்தி அமைப்புகளை நம்மிடம் காட்டியவர், ''கரன்ட் தட்டுப்பாடை என்னால சமாளிக்க முடியல. அதனாலதான், சோலார் பவர் ஜெனரேட்டர் மூலமா, பம்ப்செட்டை இயக்க ஆரம்பிச்சுட்டேன்.

கோயம்புத்தூர்தான் என்னோட பூர்விகம். போன தலைமுறையில செல்வாக்கான விவசாயக் குடும்பம். ஆனா, நான் இன்ஜீனியரிங் படிச்சுட்டு, 40 வருஷமா மெஷினுக்குள்ளயே வாழ்ந்துட்டேன். ஆனாலும், மனசுக்குள்ள விவசாய ஆசை போகல. பொண்ணு, பையன் ரெண்டுபேரும் படிச்சு அமெரிக்காவுல செட்டிலாகி நல்லா சம்பாதிக்கறாங்க. 'இனி மெஷின் வாழ்க்கை போதும்’னு விருப்ப ஓய்வு வாங்கிட்டேன். கணிசமான பணம் கையில இருந்துச்சு. அதை வெச்சு, செழிப்பா இருக்குற இந்தத் தோப்பை வாங்கினேன்.

வருஷம் முச்சூடும் தண்ணீர் தளும்புற கிணறு. இருந்தாலும், சொட்டுநீர்ப் பாசனம்தான் போட்டிருக்கேன். காய்ப்புக்கெல்லாம் குறையில்ல. அதனால என்னோட விவசாய வாழ்க்கை சந்தோஷமாதான் போயிட்டிருந்திச்சு. ஆனா, கரன்ட் பிரச்னை வந்ததுக்கப்பறம் ரொம்ப கஷ்டமாகிப் போச்சு. கிணறு நிறைய தண்ணி இருந்தும் ஒழுங்கா பாசனம் பண்ண முடியாம, மரங்கள்லாம் காய ஆரம்பிச்சுச்சு. குரும்பையெல்லாம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு.

'என்ன செய்றது’னு தீவிரமா யோசிச்சு நிறைய பேர்கிட்ட யோசனை கேட்டேன். 'ஜெனரேட்டர் வாங்கலாம்’னு சிலர் யோசனை சொன்னாங்க. அதைப்பத்தி விசாரிச்சப்போ... 'அது, சாத்தியமே இல்லை. விவசாயத்தைக் காலி பண்ணிடும்’னு தெரிய வந்துச்சு. அதுக்கப்பறம்தான் 'சோலார் பம்ப்செட்’ பத்திக் கேள்விப்பட்டேன்.

உடனே, ஒரு கம்பெனியில விசாரிச்சேன். ஒருத்தரோட தோட்டத்துல சோலார் மூலமா இயங்குற பம்ப்செட்டை நேர்ல போய் பாத்தேன். 500 அடி ஆழ கிணத்துல இருந்து சோலார் மூலம் தண்ணீர் கொட்டுச்சு. அதைப் பாத்ததும் எனக்கு நம்பிக்கை வந்துச்சு. உடனே, 5 ஹெச்.பி மோட்டாரை இயக்குற அளவுக்கு அரை சென்ட் நிலத்துல சோலர் பேனல்களை அமைச்சுட்டேன்'' என்று சந்தோஷமாகச் சொன்னார் விஜயகுமார்..
சோலார் பம்ப்/ சோலார் மின் உற்பத்தி சாதனங்கள் குறித்த 
    தகவல்தளம்                                                                                                  
                                                                                                                               -பசுமை நாயகன் 

Wednesday 28 January 2015

மண்ணின் வில்லன்- வேலிகாத்தான் மரங்கள்



     உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.



மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
 
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே'
 
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
 
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
 
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
 
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிர்வளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
 
இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட பிடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! ! 

வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்

இதை வெட்டுவதோடு நிறுத்திவிடாமல், வேரோடு
பிடுங்கி எறியுங்கள்..உங்கள் ஊர் பள்ளி ஆசிரியரை சந்தித்து இதை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் உருவாக சொல்லுங்கள்.

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!


Saturday 24 January 2015

விவசாயத்தில் கலக்கும் பள்ளி மாணவர்கள்..!

 ஆர்ஷா வித்யா மந்திர் பள்ளி எனும் தனியார் பள்ளியின் மாணவர்கள்... மண்வெட்டி, நாற்று, தொழுவுரக்கூடை என விவசாயத்தில் கலக்குகிறார்கள் என்றால் ஆச்சரியம்தானே- அதுவும் தமிழகத்தின் தலைநகரான நவநாகரிக சென்னைக்குள் இருக்கும் பள்ளியில்!
இதைப் பற்றி பேசிய பள்ளியின் தாளாளர் நிர்மலா, ''அந்தக் காலத்துல பள்ளிக்கூடம் போற எல்லா குழந்தைங்களும், வீட்டுல இருக்கறப்ப... வீட்டு வேலை, அவங்களோட குடும்பம் சார்ந்த தொழில், விவசாயம்னு எல்லாத்தையும் நடைமுறையில கத்துப்பாங்க. இதனால, அவங்களுக்கு பல துறைகள்லயும் அறிவு இருக்கும். ஆனா... எந்த நேரமும் புத்தகம், படிப்பு, பரிட்சைனே இருக்கறதால, இந்தக் கால குழந்தைங்களுக்கு அது இல்லாம போயிடுச்சு. அதனாலதான் சுற்றுச்சூழல், விவசாயம் பற்றியும் நடைமுறையில சொல்லி தர்றோம். ஒருத்தர் எத்தனை பெரிய அறிவாளியா இருந்தாலும், விவசாயத்தைப் பத்தி தெரியலனா... அந்த அறிவுக்கே அர்த்தமில்லை. அதனாலதான் அதை வெறும் புத்தக அறிவா கொடுக்காம... அனுபவ அறிவா கொடுக்கத்தான் மேடவாக்கம் பகுதியில ரெண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, பயிற்சியாளரையும் நியமிச்சுருக்கோம். எல்லா வகுப்பு மாணவர்களும் இயற்கை விவசாயப் பயிற்சியில் பங்கேற்கணும்கிறத கட்டாயமாக்கியிருக்கோம். எதிர்காலத்துல இன்னும் இதை விரிவுபடுத்தலாம்னும் தீர்மானிச்சுருக்கோம்'' என்றார், கண்களில் ஆர்வம் மின்ன!
புறநகர் பகுதியான மேடவாக்கத்திலிருந்து மாம்பாக்கம் செல்லும் சாலையில், இரண்டு நிமிடம் பயணித்தால், வலதுபுறத்தில் வருகிறது இந்தப் பள்ளிக்கூடத்தின் பயிற்சிப் பண்ணை. அங்கே சென்ற நம்மை, பண்ணை மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன், பயிற்சியாளர்கள் சுமதி, ஐஸ்வர்யா ஆகியோர் வரவேற்றனர். அங்கே மாணவ-மாணவிகள்... நெல் வயலில் உரமிடும் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்த... ''எங்கப்பா பசுமை விகடன் வாங்கறாரே... நாங்களும் அப்பப்ப படிக்கிறோமே'' என்று ஆர்வமானார்கள் மாணவ-மாணவிகள்.
அறிவியலோடு அறிமுகமாகும் இயற்கை விவசாயம்!
''தொழுவுரம் எப்படி தயார் செய்கிறீர்கள்..?'' என்று கேட்டோம். மொத்த மாணவர்களும் போட்டிப்போட... அனைவரின் சார்பாக 9-ம் வகுப்பு மாணவன் சத்யா ஆர்வமுடன் பேசினான்.
''காய்ஞ்ச நிலத்துல ஆறு அடி நீளம், ரெண்டரை அடி அகலம் கொண்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து... அதுல தென்னமட்டைகளைப் பரப்பி வைக்கணும். அதுக்கு மேல காய்ஞ்ச இலை தழைகள பரப்பணும். அதுக்கு மேல மாட்டு சாணம், கோமியம் கலந்த கெட்டியான கரைசல பரவலா ஊத்தணும். அடுத்ததா, தண்ணியில 24 மணிநேரம் ஊற வெச்ச மரக்கரியைப் பரவலா போடணும். இது கார்பன் சத்துக்கு. அடுத்ததா, வேப்பிலை, ஆடு, மாடுகள் சாப்பிடாத பச்சை இலை, தழைகளைப் போடணும். இது நைட்ரஜன் சத்துக்காக. அடுத்ததா, சாம்பல், சுண்ணாம்புத் தூள் ரெண்டையும் கலந்து போடணும். இது தாது சத்துக்களுக்காக. அதுக்கு மேல பச்சை தென்ன ஓலைகளை அடுக்கணும். இதுல தினமும் தண்ணி தெளிச்சுட்டு வரணும். 25 நாள் கழிச்சு கம்பால கொத்தி கலக்கி விடணும். மூணு மாசத்துல மண்புழுக்கள் உருவாகி, நல்ல உரமா மாறிடும். இத நேரடியா நிலத்துல கொட்டலாம். விளைச்சல் சிறப்பா இருக்கும்'' என்று தேர்ந்த விவசாயி போல சத்யா சொல்லி முடிக்க, அவனையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஒன்பதாம் வகுப்பு மாணவியின் ஒற்றைநாற்று!
நெல் சாகுபடி முறை பற்றி பேசிய ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆயுஷாஸ்ரீ, ''ஒரு ஏக்கர் சேற்று வயல்ல தொழுவுரத்தையும் பச்சை இலை தழைகளையும் போடணும். இலைகள் மூலமா, மைக்ரோ நியூட்ரிஷன் (நுண்ணூட்டச் சத்துக்கள்)... தொழுவுரம் மூலமா பாஸ்பரஸ், கார்பன், சாம்பல் எனர்ஜி எல்லாம் கிடைச்சுடும். சேற்று வயலை ப்ளோயிங் (உழுது) பண்ணி, நடுறதுக்கு ஏத்த மாதிரி தயார் பண்ணணும். மூணு கிலோ நெல் விதையை நாத்துவிட்டு,
25 நாள்ல பறிச்சு, ஒவ்வொரு நாத்துக்கும் 25 சென்டி மீட்டர் 'கேப்’ விட்டு, எஸ்.ஆர்.ஐ. மாடல்ல (ஒற்றை நாற்று நடவு) நடணும். அதிகமா தண்ணி விடாம நிலத்துல ஈரம் இருக்கற மாதிரி தண்ணி பாய்ச்சிட்டு வரணும். பதினஞ்சு நாள்ல கோனோவீடர்ல களைகளை அமுக்கி விடணும். அப்பப்போ பஞ்சகவ்யா விடணும். தேவைப்படுறப்போ நாமளே தயாரிக்கிற பூச்சிவிரட்டியையும் தெளிக்கணும். இந்த மாடல்ல சாகுபடி செய்றப்போ, விதை அளவு, ஆட்கள் செலவு, களை பறிக்கற செலவு எல்லாமே குறையும். பயிர்களுக்கு இடையிலே நல்ல 'கேப்’ இருக்கறதால... காற்றோட்டமும், சூரிய ஒளியும் நல்லா கிடைக்குது. இதனால, பயிர்கள் வேகமா வளருது. 130 நாள்ல இருந்து 140 நாளுக்குள்ள அறுவடை பண்ணிடலாம்'' என்று அழகாக விவரித்தார்.
பயிற்சியாளர் சுமதி (ஆரோவில் 'எகோ-புரோ’ அமைப்பில் பணிபுரிகிறார்), ''சிட்டியில இருக்குற பசங்களுக்கு பீட்சா, பர்கர், கோக் மட்டும்தான் தெரியும். ஆனா, இவங்களுக்கு இயற்கை விவசாயம், பயிர்கள், நெல், அரிசி... எல்லாமே தெரியும். நெல் சாகு படிக்கு வயல் தயாரிப்புல இருந்து அறுவடை வரைக்கும் அத்தனை விஷயங்களும் இவங் களுக்கு அத்துபடி. போன தடவை பூங்கார் நெல்லை ஒரு ஏக்கர்ல விதைச்சுருந்தோம். முழுக்க மாணவர்கள்தான் பயிர் செஞ்சாங்க. பண்ணையில இருக்கற ஆட்களை மாணவர்களுக்கு உதவியா பயன்படுத்தினோம். ஒரு ஏக்கர்ல 32 மூட்டை (75 கிலோ) மகசூலா கிடைச்சுது. வழக்கமா 25 மூட்டைதான் கிடைக்கும். ஆனா, நாங்க இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தினதால.... சாதனை அளவா விளைஞ்சுருக்கு.
இந்தமுறை கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா நடவு போட்டிருக்கோம். அடுத்து... பொன்னி நெல் போடறதுக்கான முயற்சியில மாணவர்கள் இருக்காங்க. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மதிய நேரத்திலும், சனிக்கிழமை காலையிலும் இங்க பயிற்சி இருக்கும்'' என்று சொன்னார்.
இந்த மாணவர்கள்... எதிர்காலத்தில் அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்தால்... விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நிச்சயம் சிந்திப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. மற்ற பள்ளிக்கூடங்களும், இப்படி தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டால், தலைமுறைகள் தாண்டியும் விவசாயமும் செழிக்கும்!
தொடர்புக்கு, ஆர்ஷா வித்யா மந்திர் பள்ளி,
தொலைபேசி: 044-22300505,
செல்போன்: 98405-74244
எகோ-புரோ, தொலைபேசி: 0413-2622469.
பசுமைப் பாடம் சொல்லும் மகன்!
மாணவர்கள், இயற்கை வழி விவசாயத்தில் பூங்கார் நெல்லை விதைத்து, அசத்தலான மகசூலை அள்ளியிருக்கிறார்கள். இந்த சந்தோஷத்தை மாணவர்களுக்கு முழுமையாக அளிக்கும் வகையில், அந்த நெல்லை அரிசியாக்கி, அவர்களுக்கே வழங்கும் நிகழ்ச்சி, சமீபத்தில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி, ஆரோவில் 'எகோ-புரோ’ அமைப்பின் முதன்மை அலுவலர் லூக்காஸ், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அரிசிப் பைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
அரிசிப்பையோடு நின்று கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவன் கேசவ் மித்தன், ''ஆரம்பத்துல மாட்டுச் சாணத்தைத் தொடுறதுக்கு அருவருப்பா இருந்துச்சு. இப்ப அதெல்லாம் பழகிடுச்சு. நடவுல இருந்து அறுவடை வரைக்கும் எல்லாம் எனக்குத் தெரியும். இப்போ என்னோட சிலபஸ்ல விவசாயமும் சேர்ந்துடுச்சு'' என்றான், பெருமிதமாக!
மகனின் பேச்சை ரசித்தபடி நின்றிருந்த தந்தை வெற்றிவேல், ''சின்ன வயசுல எனக்குக் கிடைச்ச விவசாய அனுபவம் என் மகனுக்கு கிடைக்காம போயிமோனு கவலைபட்டுக்கிட்டு இருந்தேன். இப்ப எனக்கே அவன் இயற்கை விவசாயம் பத்தி நிறைய பாடம் நடத்துறான்'' என்றார், உற்சாகமாக.

Tuesday 20 January 2015

யூரியா நமக்கு தேவையா..?

காற்றிலேயே 78% நைட்ரோஜன் (தழைசத்து) இருக்கையில் வெறும் 46% மட்டுமே தழைசத்து உள்ள யூரியா நமக்கு தேவையா..??. 


 
  
    காற்றில் உள்ள நைட்ரோஜனை மண்ணில் பிடித்து வைத்து செடிகளுக்கு அளிக்கும் நுண்ணுயிரிகளை பெருக வைத்தாலே போதும். இந்த வேலையை நாட்டு மாடுகளின் சாணம, மூத்திரம் கொண்டு செய்யபடும் இயற்கை உரங்களான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன்றவை செவ்வனே செய்து விடும். மண்ணின் உயிரை மீட்டுவிட்டாலே தன்னை தானே உரமேற்றிகொள்ளும் திறன் பூமிக்கு வந்துவிடும்.

   மண்ணுக்கு கிடைத்த அந்த நைட்ரோஜனை ஆவியாக்கி வீணடிக்கும் நுண்ணுயிரிகளை கட்டுபடுத்தவும் வேண்டும். அந்த பணியை வேம்பு மிக சீரிய முறையில் செய்து விடும். வேப்பம்புன்னாக்கு/வேப்பெண்ணெய் கொண்டு போன்றவற்றை மண்ணுக்கும் பயிர்களுக்கும் அளிப்பதால் வேர்களில் தழைசத்து வீணடிப்பு தடுக்கப்படுவதோடு, பூச்சி, பூன்ஜான் வேர் அழுகல் போன்ற பிரச்சனைகளும் தடுக்கப்படும். 
   இல்லை இல்லை, நான் யூரியா போட்டே தீருவேன் என்றால் கூட அதில் வேம்பு கலந்து போட்டால் மூன்றில் ஒரு பங்கு யூரியாவை மிச்சபடுத்தலாம். அதாவது மூன்று மூட்டை போடுவதற்கு பதில் இரண்டு மூட்டை யூரியாவை கொட்டி வேப்பெண்ணெய் இரண்டு லிட்டர் கலந்து பிசரி போட்டால் போதும். உங்கள் பணமும், மண்ணும், இயற்கையும் காக்கப்படும்.
   பணத்தை செலவழித்து கெமிக்கல் விஷத்தை கொண்டு மண்ணையும் ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் கெடுப்பதும், மாறாக இயற்கை வழியில் சென்று பயனடைவதும் உங்கள் விருப்பம்!
 

                                                                                    -பசுமை நாயகன்

சிறு புல்லும் காசு தரும்

நெல் சாகுபடி மிகவும் குறைந்து விட்டதால் கால்நடைகளின் முக்கிய உலர்தீவனமான வைக்கோலுக்குப் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்னொரு புறம் தீவனப்பயிர்கள் பயிரிடும் பரப்பும் குறைந்துகொண்டே வருகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை பசுந்தீவனத்திற்கு 60% அளவிற்கும்  உலர்தீவனத்திற்கு  74% அளவிற்கும் பற்றாக்குறையும் நிலவுகிறது. அதனால் தீவனப்பயிர்களின் உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்குத் தீர்வாய் அமைந்துள்ளன கோவை வேளாண்மை ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ள இந்த கோ-3, கோ-4 வகை பசுந்தீவனங்கள்.

இந்த கோ-3, கோ-4 புல்வகைகள் தென்னிந்தியாவின் தட்பவெட்பநிலைக்கு மிகவும் ஏற்றவை. இவ்வகை தீவனப் புற்கள் நீர்ச்சத்தும் சுண்ணாம்புச்சத்தும் (Calcium) நிறைந்தவை. ‘கோ-3’ ஐ விட ‘கோ-4’ இல் சுண்ணாம்புச் சத்து அதிகம். இதன் வேர்கள் ஆழமாகவும் பரவலாகவும் இருப்பதால் கனத்த மழையில் மண்ணரிப்பைத் தடுப்பதற்கும் பயன்படுகிறது. இவை ஓரளவு வறட்சியைத் தாங்கி அடர்த்தியாய் வளரக்கூடியவை. தமிழக அரசு   2012-2013ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பசுந்தீவன உற்பத்தி மேம்பாட்டிற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தீவனப்புல் பயிர் செய்யப்படும் ஒவ்வொரு கால் ஏக்கருக்கும் சூ3,000 மானியம் வழங்கப்படுகிறது.

எப்படிப் பயிரிடுவது?
 
மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, கள்ளிக்குடி யூனியன், வெள்ளாகுளம் கிராமத்தில் உள்ள பிரபாகரன், கடந்த 7 ஆண்டுகளாக கோ-3, கோ-4 பசுந்தீவனங்களை பயிர்செய்து வருகிறார்.

பயிரிடும் முறையைப் பற்றி அவர் விவரிக்கிறார்:  வாய்க்கால் பாத்தி கட்டி, 2 க்கு 2 அடி இடைவெளி விட்டு,  இந்த கோ-3, கோ-4 வேர்க்கரணைகளை கரும்பைப்போல் நட வேண்டும். அடி உரம் சாணம் போதும். மேற்கொண்டு வளர்ச்சிக்கு செயற்கை உரங்களான யூரியா, பொட்டாஷ் இட வேண்டும். மழைநீர் அத்தியாவசியத் தேவை இல்லை. இறவைக் கிணற்று நீர்ப்பாசனம் வாயிலாக சுத்தமான நீர் இருந்தால் போதுமானது. 8 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். ஒரு வாரத்துக்கு தண்ணீர் இல்லாமல் இருந்தால் கூட பசுமை மாறாது இருக்கும்.

மற்ற பருவப்பயிர்களைப்போல் அல்லாது, தண்ணீர் இருந்தால் ஆண்டு முழுவதும் வளர்த்து அறுவடை செய்யலாம். தரை மட்டத்திலிருந்து 8-10 செ.மீ. விட்டு அறுவடை செய்வதன் மூலம் புல் மீண்டும் வேகமாக வளரும். நட்டதிலிருந்து 90வது நாளில் முதல் அறுவடை செய்யலாம். அதற்கடுத்து 45 நாளுக்கு ஒரு முறை தொடர் அறுவடை செய்யலாம்.    சிறப்பு பாதுகாப்பு முறைகள் ஏதும் இதற்குத் தேவையில்லை" என்று பயிரிடும் முறைகளை விவரிக்கும் பிரபாகரன், ஓராண்டுக்கு ஒரு ஏக்கர் நிலத்தில் 110 டன் அளவு விளைச்சல் காணமுடியும்.’ உரிய பராமரிப்பு இருந்தால் 10 வருடம் கூட இது பயன் தரக்கூடும்" என்கிறார் அவர்.

செலவும் வரவும்
 
இப்பயிரின் 1,000 வேர்க்கரணைகள் கொண்ட கட்டு ரூபாய் 350க்கு கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விற்கப்படுகிறது. நன்கு வளர்ந்த ஒரு கட்டுப்புல் ரூபாய் 5 முதல் ரூபாய் 8 வரை சந்தையில் விலைபோகிறது. ‘பயிரை அறுத்ததிலிருந்து 24 மணி நேரத்தில் இத்தீவனத்தைப் பயன்படுத்த வேண்டும், இல்லையென்றால் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் அழுகி விடும்" என்று விவசாயிகளுக்குப் பயனுள்ள தகவலையும் தந்தார் பிரபாகரன். மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, மேலூர், அவனியாபுரம் போன்ற ஊர்களிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இந்தத் தீவனப் புல் பயிரிடப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்மேடு கிழக்குப் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலாஜி, கடந்த 13 ஆண்டுகளாக தனது 2 ஏக்கர் நிலத்தில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து வருகிறார்.

என்னோட நிலத்தில் முழுமையான இயற்கை உரங்களை மட்டும்தான் பயன்படுத்துறேன்’ என்று சொல்லும் பாலாஜி, ‘செலவினங்கள் என்று  பார்த்தா ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கருக்கு 7 டன் வரை பசுந்தீவனம் கிடைக்கும். ஒரு நாளைக்கு தோராயமாக 300 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்" என்கிறார் அவர்.

கால்நடைகளின் தோழன்  
 
மாடுகளுக்கு கலப்புத்தீவனம் கொடுப்பதைவிட பசுந்தீவனம் கொடுப்பதால் செலவினங்களைக் குறைக்க முடியும். பசுந்தீவனங்களில் புரதம், தாது உப்புகள், உயிர்ச் சத்துக்கள் குறிப்பாக உயிர்ச்சத்து ஏ மற்றும் இ ஆகியவை உலர்தீவனத்தில் உள்ளதை விட அதிகமாக உள்ளன. பசுந்தீவனப் புரதத்தில் ஆர்ஜனின், லைசின் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. கோ-3, கோ-4 இவ்வகைப் புல்களில் புரதச்சத்து 5 லிருந்து 10 சதவிகிதம்வரை உள்ளது. 10 மாடுகளுக்கு ஒரு ஏக்கர் தீவனப்புல் போதுமானது" என்று சொல்லும் பாலாஜிதான் வளர்க்கும் பசுக்களுக்கு பசுந்தீவனத்தையே தீவனமாகக் கொடுக்கிறார்.

விவசாயிகளின் உற்ற தோழனாய் திகழும் இந்த கோ-3, கோ-4 இனி வரும் காலங்களில் தீவனப் பற்றாக்குறையைப் பெரிதும் குறைக்கும் என்பதில் ஐயமில்லை. அதிலும் இது நம் தமிழ்நாட்டின் அறிவியல் உருவாக்கம் என்பது நமக்குப் பெருமையே!

தொடர்புக்கு : 98406 90222 (பாலாஜி)
98436 37287 (பிரபாகரன்)
 
வல்லுனர் விளக்கம்

‘‘ஒரு ரூபாய் செலவு செய்தால் மூன்று ரூபாய் லாபம்’’

டாக்டர். எ. கலாமணி
பேராசிரியர் மற்றும் தலைவர், தீவனப் பயிர்த் துறை
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை

எந்தப் பருவ நிலையையும் சமாளித்து வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய பயிர். பருத்தி, கரும்பு போலவே இதையும் பணப் பயிர் என்று சொல்லலாம். கம்பு, நேப்பியர் புல் இரண்டையும் இனக்கலப்பு செய்துகொண்டு வந்த ரகம் கோ 4. இது பல்லாண்டு பயிர். ஒருமுறை பயிரிட்டால்  4 ஆண்டுகளுக்கு அறுவடை செய்யலாம். சாறு இனிப்பாக இருக்கும் (சர்க்கரை சத்து 3.4%). தண்டு மிருதுவானது. 6 அடி உயரம் வரை வளரும். ஆனால் சாயாது. கணுக்களை நட்ட 70 நாட்களில் முதல் அறுவடைக்குத் தயாராகிவிடும். அதிலிருந்து ஒவ்வொரு 45 நாட்கள் இடைவெளியில் ஆண்டிற்கு 7 முறை அறுவடை செய்யலாம். ஒரு ரூபாய் செலவு செய்தால் 3 ரூபாய் லாபம்  தரக்கூடியது என்பதால் விவசாயிகள் தாராளமாகப் பயிரிடலாம்".


என். ஹரிபிரசாத் மற்றும் க. ராஜேஷ்

Organic farming

Organic farming is the process by which crops are raised using only natural methods to maintain soil fertility and to control pests. The amount of crops produced by conventional farming methods is often larger than that of organic farming. But conventional farming, with its heavy use of manufactured fertilizers and pesticides (agrochemicals), has a greater negative effect on the environment. In comparison, organic farming produces healthy crops while maintaining the quality of the soil and surrounding environment.

Soil fertility

Soil fertility is a measure of the soil's ability to grow crops and plants. Fertility is affected by a soil's tilth and the amount of nutrients it contains. Tilth refers to the physical structure of soil. Good tilth means that soil is loose and not compacted. It holds a great amount of water without becoming soggy and permits air to penetrate to plant roots and soil organisms. It also allows plant roots to grow and penetrate deeper.
The nutrients in soil are directly related to the soil's concentration of organic matter (living or dead plants and animals). Plants require more than 20 nutrients for proper growth. Some of these nutrients are obtained primarily from the soil, especially inorganic compounds of nitrogen, phosphorus, potassium, calcium, magnesium, and sulfur. In natural ecosystems, microorganisms (bacteria and fungi) in the soil break down organic matter, releasing the inorganic nutrients necessary for plant growth.
In conventional farming, soil tilth is destroyed by the use of heavy machinery, which compacts the soil. Very little organic material is added to the soil in conventional farming, decreasing the amount of nutrients that are naturally produced. Instead, inorganic nutrients are added directly to the soil in the form of synthetic fertilizers, which are manufactured from raw materials. These fertilizers are often applied at an excessive rate. As a result, they pass through the soil to contaminate groundwater and flow along the surface of soil to pollute surrounding bodies of water, threatening native species.
In contrast, organic farmers try to increase soil fertility by increasing the organic matter in the soil. They do so by adding the dung and urine of animals (which contains both organic matter and large concentrations of nutrients), by plowing under growing or recently harvested plants (such as alfalfa or clover), or by adding compost or other partially decomposed plants. These methods rely more heavily on renewable sources of energy and materials rather than on nonrenewable materials and fossil fuels.

Managing pests

In agriculture, pests are any living thing that causes injury or disease to crops. This can occur when insects eat foliage or stored produce, when bacteria or fungi cause plant diseases, or when weeds interfere excessively with the growth of crop plants. In conventional farming, pests are usually managed using various types of pesticides, such as insecticides, herbicides, and fungicides. In the short term, these methods can be effective in reducing the influence of pests on crops. However, the long-term use of these chemicals has been shown to have a severe effect on the environment.

Words to Know

Fertilizers: Substances added to agricultural lands to encourage plant growth and higher crop production.
Organic matter: Any biomass of plants or animals, living or dead.
Pesticides: Substances used to reduce the abundance of pests, any living thing that causes injury or disease to crops.
Tilth: The physical structure of soil.
Organic farmers do not use synthetic, manufactured pesticides to manage their pest problems. Rather, they rely on other methods. These include using crop varieties that are resistant to pests and diseases, introducing natural predators of the pests, changing the habitat of the crop area to make it less suitable for the pest, and (when necessary) using a pesticide derived from a natural product.

Animal husbandry

In conventional farming, livestock animals are generally kept together under extremely crowded and foul conditions. Because of this, they are highly susceptible to diseases and infections. To manage this problem, conventional farmers rely on antibiotics, which are given not only when animals are sick but often on a continued basis in the animals' feed. Since the mid-1990s, however, scientists have known that this practice has led to the development of new strains of bacteria that are resistant to the repeated use of antibiotics. These bacteria are not only harmful to the animals but are potentially harmful to the humans who consume the animals.
Organic farmers might also use antibiotics to treat infections in sick animals, but they do not continuously add those chemicals to the animals' feed. In addition, many organic farmers keep their animals in more open and sanitary conditions. Animals that are relatively free from crowding and constant exposure to waste products are more resistant to diseases. Overall, they have less of a need for antibiotics.
Intensively managed agriculture (left) compared with organic farming (right). (Reproduced by permission of
The Gale Group
.)

Some conventional farmers raising livestock use synthetic growth hormones, such as bovine growth hormone, to increase the size and productivity of their animals. Inevitably, these hormones remain in trace concentrations, contaminating the animal products that humans consume. Although risk to humans has yet to be scientifically demonstrated, there is controversy about the potential effects. Organic farmers do not use synthetic growth hormones to enhance their livestock.